தஞ்சை, டிச. 30: தஞ்சை ஆத்துப்பாலத்தில் மறியலில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரராவ் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சை ஆத்துப்பாலத்தில் இந்து முன்னணி சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர்.