×

10 பேர் கைது கைத்தறி நெசவாளர்கள் வாழ்க்கை மேம்படுத்தப்படும்

கும்பகோணம், டிச. 30: கும்பகோணம் அருகே திருபுவனம் கடைவீதியில் நேற்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்த ஊருக்கு நான் ஏற்கனவே சினிமா படபிடிப்புக்கு வந்துள்ளேன். இந்த ஊரை நான் சினிமாவில் அழகாக பார்த்து ரசித்ததுபோல் எல்லோரும் ரசித்துள்ளோம். அதேபோல் மீண்டும் இந்த ஊரை அழகாக்க வேண்டும். இங்குள்ள கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்றால் நீங்கள் எல்லோரும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

கும்பகோணம் நிகழ்ச்சி ரத்து: கும்பகோணத்தில் கமல்ஹாசன் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக காந்தியடிகள் சாலை 4 முனை சந்திப்பில் திறந்த ஜீப்பில் நின்றவாறு கமல்ஹாசன் பேசுவதற்கு போலீசார் அனுமதி கொடுத்திருந்தனர். மாலை 4 மணிக்கு கமல்ஹாசன் வருவதாக தெரிவித்திருந்த நிலையில் 6 மணி வரை வரவில்லை. அப்போது கமல்ஹாசன் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் அடுத்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

Tags : Arrest ,handloom weavers ,
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!