×

வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவடையும்.

சென்னைக்கு 990 கி.மீ. தொலைவில் மையம்

சென்னைக்கு 990 கி.மீ. கிழக்கு தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

அரபிக்கடலிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடல், அரபிக்கடல் இரண்டிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

நாளை மறுநாள் புயலாக வலுப்பெற வாய்ப்பு

அக்.27ம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெறும்.

ஆந்திராவை நோக்கி நகரும் புயல்

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 7 கி.மீ. வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்கிறது. கர்நாடகாவின் மங்களூருக்கு 640 கி.மீ. வடமேற்கு திசையில் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம்கொண்டுள்ளது. புயலாக உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும்.

 

Tags : Bank Sea ,Indian Meteorological Centre ,Delhi ,
× RELATED வரலாறு காணாத விலை உச்சம் தங்கம் ஒரு...