×

செல்போனில் பேசி சித்தாளுக்கு டார்ச்சர் கொத்தனாருக்கு கத்திக்குத்து

கூடலூர். டிச. 30: கூடலூரில் உள்ள காந்திகிராமத்தை சேர்ந்தவர் கோபிநாத் (39), கொத்தனார். இவருடன், அதே ஊரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சித்தாள் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், கோபிநாத் சித்தாளிடம் அடிக்கடி செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு ராஜீவ்காந்தி நகரில், கோபிநாத்தை வழிமறித்த சித்தாளின் கணவர் கொலை மிரட்டல் விடுத்து, கத்தியால் கொத்தனாரின் இடதுகையில் குத்தினார். இது தொடர்பாக கூடலூர் வடக்கு எஸ்ஐ கணேசன், சித்தாளின் கணவரை கைது செய்தார். கோபிநாத்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.கொலை மிரட்டல்: கூடலூர் கள்ளர் மடத்து தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் (45). இவருக்கு சொந்தமான இடம் கூடலூர் கே.கே காலனியில் உள்ளது. இந்நிலையில் அதே காலனியைச் சேர்ந்த கோபால் மகன் தாமரைச்செல்வன், அவர் மனைவி கவ்ரினா மற்றும் ஆதித்யா, ஆதிரை, செல்லத்துரை, இந்திரா ஆகியோர் அத்துமீறி நுழைந்து மகேந்திரனையும் அவரது குடும்பத்தினரையும் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து மகேந்திரன் தேனி எஸ்பியிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், கூடலூர் தெற்கு எஸ்ஐ தினகர பாண்டியன் தாமரைச்செல்வன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : torchbearer ,Siddharth ,
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...