×

மக்கள் கிராமசபை கூட்டங்கள் மூலம் அதிமுக ஊழல் குறித்து மக்களுக்கு தெரிவிக்கிறோம் தங்கத்தமிழ்ச்செல்வன் பேச்சு

பெரியகுளம், டிச. 30: பெரியகுளம் 9வது வார்டில் திமுக சார்பில் ‘அதிமுக நிராகரிப்போம்’ என்னும் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடந்தது. இதில் தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதையடுத்து அவர் பேசுகையில், ‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் மற்றும் கேரளாவில் அதிக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். நமது கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களின் ஊழல் குறித்து 97 பக்கங்கள் கொண்ட புகார் மனுவை கவர்னரிடம் கொடுத்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளார். அதிமுக ஊழல் குறித்து தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் வழியாக பொதுமக்களுக்கு திமுக சார்பில் தெரிவித்து வருகிறோம்’ என்றார்.கூட்டத்தில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், பெரியகுளம் திமுக நகர செயலாளர் முரளி, நிர்வாகிகள் செல்லப்பாண்டியன், ரவி, அபுதாகிர், ஸ்டாலின் குணா உட்பட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பொதுமக்களிடம் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்னும் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.

Tags : gram sabha meetings ,AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...