×

ஆசிரியர் கூட்டணி புதிய நிர்வாகிகள் தேர்வு

சிவகங்கை, டிச.30:  சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை வட்டாரத் தேர்தல் நடந்தது. வட்டார தலைவராக கலைச்செல்வி, செயலராக கணேசன், பொருளாளராக பிரபாகரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக வேணுகோபால், பஞ்சுராஜ், அசோக்பாரதி, திருமுருகன், வட்டார துணைத் தலைவர்களாக இந்திரா காந்தி, மீனாட்சி, சுரேஷ், ஜான்தாமஸ் வட்டார துணைச்செயலராக சத்தியராஜ், சங்கரலிங்கம், சாந்தா மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து நடந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு வட்டார தலைவர் கலைச்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் தாமஸ் அமலநாதன், முத்துப்பாண்டியன், குமரேசன், புரட்சித்தம்பி, சிங்கராயர், ஆரோக்கியராஜ், ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை உடனே ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார பொருளாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.   


Tags : Teacher Alliance ,executives ,
× RELATED தொலை தூரத்தில் தேர்தல் பணி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு