×

மூதாட்டியை கட்டி போட்டு 27 பவுன் நகை, பணம் கொள்ளை

மதுரை, டிச. 30:  மதுரை தல்லாகுளம் அழகர்கோயில் ரோடு அவுட்போஸ்ட் பகுதியை சேர்ந்த தங்கவேலு மனைவி சரோஜா (66). இவரும், மற்றொரு மூதாட்டியும் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் 4 பேர் இரு மூதாட்டிகளையும் தாக்கி, சேலையால் கட்டிப்போட்டனர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகள் உள்பட 27 பவுன் நகைகள், ரொக்கம் ரூ.85 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு தப்பினர்.  இதுகுறித்து சரோஜா அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு