×

கள்ளக்காதலில் விபரீதம் பெண் கல்லால் அடித்துக் கொலை

வத்தலகுண்டு, டிச. 30: வத்தலகுண்டு அருகே, விருவீடு பகுதியில் கள்ளக்காதல் தகராறில் பெண் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியில் உள்ள சந்தையூர் ஊராட்சி ராஜாதானி கோட்டையைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி ரேகா (42). இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன் லோகநாதன் இறந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விருவீடு அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த முருகனுடன் (43), விவசாய வேலைக்கு சென்றபோது ரேகாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. முருகனுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே சில மாதமாக பையன் வளர்ந்துவிட்டான் இனி நமது பழக்கத்தை நிறுத்திக் கொள்ளலாம் என முருகனிடம் ரேவதி தெரிவித்துள்ளார். மேலும், பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு, ரேவதி மகன் பிரகாஷ் தனது தாயைக் காணவில்லை என்று விருவீடு போலீசில் புகார் செய்தார். நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் இது குறித்து விசாரித்து வந்த நிலையில், ராஜாதானிகோட்டை மலைப்பகுதியில், ரேவதி தலையில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்த விருவீடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கள்ளக்காதலன் முருகனை பிடித்து விசாரித்ததில், சம்பவத்தன்று உல்லாசமாக இருந்த பிறகு தகராறு ஏற்பட்டதால், ரேகாவை கல்லால் அடித்து கொன்றதாக தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் முருகனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : death ,love affair ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...