×

ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க திமுக ஆட்சி மலரணும் திமுக மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

சின்னாளபட்டி, டிச. 30: ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், கன்னிவாடி பேரூராட்சி ரெட்டியார்பட்டியில் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ப.க.சிவகுருசாமி தலைமை வகித்தார். கன்னிவாடி பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சண்முகம் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிலால் உசேன், பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம், பேரூர் துணை செயலாளர் சர்புதீன், அவைத்தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ‘ஆத்தூர் தொகுதியில் அதிமுக, பாஜவினர் திமுக மீது பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர். இதற்கு சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் தக்க பதிலடி கொடுப்பர்.

தமிழக மக்களுக்கு, மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவரும்போது, அதை தடுத்து நிறுத்தும் போர்வாளாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளார். நீட் தேர்வால் பல ஏழை விவசாயிகளின் பிள்ளைகள் மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக ஆட்சி மலர வேண்டும்’ என்றார். நிகழ்ச்சியில் பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் பிரபு, துணை அமைப்பாளர் கோபி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : IP Senthilkumar ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி