×

ஒட்டன்சத்திரத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

ஒட்டன்சத்திரம், டிச. 30:  பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்பவர்கள் ஒட்டன்சத்திரம் வழியாக சென்று வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், விபத்து ஏற்படாமல் இருக்கவும், சாலையோர வியாபாரிகள் தங்களது ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி அசோகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலை, பழனி சாலை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில்  ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசன், போக்குவரத்து சார்பு ஆய்வாளர் நல்லசாமி, காவலர் சூர்யா, தாமரைக்கண்ணன், சக்திவேல் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

Tags : roadside vendors ,
× RELATED 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக...