×

குளத்தூர் அருகே டூவீலரில் மணல் கடத்திய 4பேர் கைது

குளத்தூர், டிச. 30: குளத்தூர் அருகே டூவீலரில் மணல் மூட்டைகளை கடத்திய நான்குபேர் கைது செய்யப்பட்டனர். குளத்தூர் எஸ்ஐ ராமசந்திரன் மற்றும் போலீசார் பூசனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பூசனூர் மேலத்தெருவைச் சேர்ந்த முனியசாமி மகன் மொட்டையசாமி(22), முத்துராமலிங்கம் மகன் மாரிமுத்து(25), பரமசிவம் மகன் மருதுபாண்டி, முனியசாமி மகன் பொன்ராஜ் ஆகியோர் வைப்பார் ஆற்றுப்படுகையில் இருந்து மணல்  மூடைகளை டூவீலர் மூலமாக கடத்தி செல்வது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அவர்களை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார் 4 டூவீலர்களையும் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Kulathur ,
× RELATED குளத்தூர் வாக்குசாவடியில் சுயேட்சை வேட்பாளர் தர்ணா