×

செக் மோசடி வழக்கு வைகுண்டம் விவசாயிக்கு 6மாதம் சிறை

சாத்தான்குளம், டிச. 30: செக் மோசடி வழக்கில் வைகுண்டம் விவசாயிக்கு 6மாதம் சிறை தண்டனை விதித்து சாத்தான்குளம் நீதிபதி உத்தர
விட்டார். நாசரேத் அருகேயுள்ள வெள்ளரிக்காயூரணியைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன் மகன் காசிராஜன்(43). விவசாயியான இவரிடம் வைகுண்டம் மேலபுதுக்குடியைச் சேர்ந்த விவசாயி குருசாமி(58) கடந்த 3.02.2015 அன்று அவரது மகள் திருமணத்துக்கு ரூ.3லட்சம் கடன் வாங்கியுள்ளார். 2மாதத்தில் பணத்தை திருப்பி வழங்குவதாக தெரிவித்திருந்த அவர், காசிராஜனுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் காசோலையை வழங்கினார்.

இதையடுத்து காசிராஜன், வங்கியில் காசோலையை செலுத்தியபோது குருசாமி கணக்கில் பணம் இல்லையென தெரியவந்தது. இதையடுத்து காசிராஜன், கடந்த 29.04.2015 அன்று சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், குருசாமிக்கு 6மாத சிறை தண்டனையும், ரூ.3லட்சத்தையும் காசிராஜனுக்கு வழங்குமாறும் உத்தரவிட்டார். மேலும் பணம் கட்ட தவறினால் மேலும் 6மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.

Tags : Czech ,
× RELATED துபாய் ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றது சினியகோவா ஜோடி