×

கேபிகே நினைவு நாள் தண்டுபத்தில் அன்னதானம் வழங்கல்

திருச்செந்தூர், டிச. 30: முன்னாள் அமைச்சர் கேபி கந்தசாமி நினைவு நாளையொட்டி தண்டுபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் கேபி கந்தசாமியின் 26வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தண்டுபத்து பூந்தோட்டத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் அனிதாகுமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அட்மிஷன் ஆபீஷர் கண்ணப்பிரான், முதல்வர் மீனா, துணை முதல்வர் சாந்திஜெய, நெல்லை அலுவலக முருகன், உடன்குடி யூனியன் சேர்மன் பால்சிங், கேடிசி முருகன், தண்டுபத்து பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணம்மாள், துணைத்தலைவர் சுயம்பு, பாலமுருகன், இசக்கிமுத்து, நெல்லை இசக்கி, தேன்ராஜ், அருள், பேச்சிமுத்து, ஐகோர்ட்துரை, விமலன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்பட திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். முன்னதாக தண்டுபத்து அனிதாகுமரன் மெட்ரிக்மேனிலைப்பள்ளியில் உள்ள கேபிகே சிலைக்கு பள்ளி அட்மிஷன் ஆபீசர் கண்ணப்பிரான், முதல்வர் மீனா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : KPK Memorial Day ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது