×

ஓட்டல் பார்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை

நெல்லை, டிச. 30: ஓட்டல் பார்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து நெல்லை கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிமுறை கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக அமலில் உள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு பகுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பார்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்தால் அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெல்லை கலெக்டர் விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் மதுவிலக்கு ஆணையர் உத்தரவுப்படி, நெல்லை மாவட்டத்தில் கேளிக்கை மன்றங்கள் (எப்எல்2), நட்சத்திர விடுதிகள்(எப்எல்3), தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் நடத்தப்படும் ஓட்டல்கள் (எப்எல்3ஏ, எப்எல்3ஏஏ), விமான நிலைய விடுதிகள் (எப்எல்10) ஆகிய உரிமத்தலங்களில் வருகிற டிச.31ம் தேதி அன்று இரவில் புத்தாண்டு 2021 கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : celebration ,New Year ,
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!