×

நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் பணிக்கு நேர்காணல்: காவலர்களுக்கு இன்று தேர்வு நடக்கிறது

வேலூர், டிச.30: வேலூர் மண்டல வாணிப கழகத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தர் பணிக்கான நேர்முக தேர்வு நேற்று நடந்தது. தொடர்ந்து, இன்று காவலர் பணியிடங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக வேலூர் மண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணிக்கு தற்காலிகமாக பட்டியல் எழுத்தர் மற்றும் காவலர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி பட்டியல் எழுத்தருக்கான நேர்முகத்தேர்வு வேலூர் மண்டல மேலாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதனை மண்டல மேலாளர் நாகராஜன் தலைமையில், கண்காணிப்பாளர்கள் சுரேஷ், மகேஷ், குப்புசாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து வாணிப கழக அதிகாரிகள் கூறுகையில், காலியாக உள்ள 50 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அறிவியல் துறை சார்ந்த இளங்கலை பட்டப்படிப்பு தகுதியுடையவர்கள் நேர்காணலில் கலந்துகொள்ள முடியும். அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறுபவர்களுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்களுடன், சேர்த்து இடஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். தொடர்ந்து இன்று காவலர் பணிக்கான நேர்முக தேர்வு நடைபெறும்’ இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Paddy Procurement Station ,guards ,
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா