×

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

குன்றத்தூர்: மாங்காடு அடுத்த பட்டூர், பானு நகரை சேர்ந்தவர் கபீர். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கவுகார் (37). நேற்று முன்தினம் கபீர் வேலைக்கு சென்றார். மதியம், கவுகார் வீட்டில் இருந்து புகை வந்தது. இதை கண்டு அச்சமடைந்த அக்கம்பக்கத்தினர், அங்கு சென்று பார்த்தபோது, கவுகார் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், கவுகாருக்கு திருமணமாகி கடந்த ஓராண்டுக்கு முன்பு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. கொரோனா ஊரடங்கால் கணவருக்கு போதிய வருமானம்  இல்லை. இதனால், அவர்கள் குடும்பம் நடத்த சிரமப்பட்டனர். தற்போது, அவர்களுக்கு மீண்டும் குழந்தை பிறந்தது. குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் கவுகார், மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுகார், மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Teen ,suicide ,
× RELATED டிவி தொகுப்பாளரை கடத்தி அறையில்...