×

கள்ளக்காதல் தகராறில் வாலிபருக்கு வெட்டு: 5 பேருக்கு வலை

பொன்னேரி:  மீஞ்சூர் அடுத்த வல்லூரை சேர்ந்த கிரீஸ்(40) என்பவருக்கும் அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சேர்ந்த பூமா(35). கஞ்சா வியாபாரி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சேர்ந்த அரிபாபு(24) என்பவருடன் கடந்த சில மாதங்களாக பூமாவுக்கு தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இது கிரீசுக்கு தெரியவர கள்ளத்தொடர்பை நிறுத்தும்படி அவர் பூமாவை கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ந்து அரிபாபு பூமாடன் தொடர்பு வைத்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த கிரீஸ் தனது கூட்டாளிகள் நேற்று முன்தினம் அரிபாபுவை அத்திப்பட்டு புதுநகர் ஐபிபிஎல் கம்பெனி அருகே வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அரிபாபுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ஹரிபாபுவின் தந்தை மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள  5 பேரை தேடி வருகின்றனர்.

Tags : teenager ,love affair ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை