×

மாணவனை வெட்டிய 4 நண்பர்கள் கைது

ஆவடி:  ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தயாளன்(20). சென்னை மாநிலக்கல்லூரியில் பி.ஏ 3ம் ஆண்டு பொருளாதாரம் பயின்று வருகிறார். கடந்த 27ம் தேதி மாலை அதே பகுதி நூலகம் அருகே நடந்து சென்றபோது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதில், தயாளன் படுகாயமடைந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில், ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தயாளனின் நண்பர்களான ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சேர்ந்த கோகுல்நாத்(22), அஜித்குமார்(22), ஆவடி அருகே மிட்னமல்லியை சேர்ந்த வசந்தவேலன்(23), ஆவடி ராமலிங்கபுரத்தை சேர்ந்த தனசேகர்(24) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், தீபாவளியன்று தயாளனுக்கும், அவரது நண்பர்களுக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட முன்விரோதத்தில் தயாளனை வழிமறித்து வெட்டிக்கொல்ல முயன்றது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக உள்ள ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த அஜீஸ்(22) தேடுகின்றனர்.

Tags : friends ,hacking student ,
× RELATED துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய...