×

கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க 6000 போலி விண்ணப்பங்கள்: ஒரு விண்ணப்பத்திற்கு 80 ரூபாய் என திடுக் தகவல்

 

ஐதராபாத்: கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க போலி விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், விண்ணப்பம் ஒன்றிற்கு ரூ.80 வாங்கப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் ஆலந்த் தொகுதியில் வாக்காளர்களை நீக்க போலி விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுபற்றி விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதையடுத்து, போலி விண்ணப்பங்கள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவினர் நடத்திய விசாரணையில், ஒவ்வொரு படிவத்துக்கும் ரூ.80 வீதம் தரப்பட்டுள்ளது என்றும், போலியான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 75 சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 2022ம் ஆண்டு டிசம்பர் முதல் 2023 பிப்ரவரி வரை சுமார் 6 ஆயிரத்து 18 போலி விண்ணப்பங்கள் பெயர் நீக்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு மொத்தமாக டேட்டா சென்டருக்கு ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் வரை வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 24 மட்டுமே உண்மையானவை என்பதும் மீதமுள்ளவை போலி என்பதும் தேர்தல் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

Tags : Karnataka ,Hyderabad ,Aland ,Kalaburagi district ,Karnataka… ,
× RELATED விபத்தில் எஸ்எஸ்ஐ பலி