×

உப்பாறு அணைக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகள் முரசு கொட்டி ஆர்ப்பாட்டம்

தாராபுரம், டிச.30: உப்பாறு அணைக்கு தண்ணீர் கேட்டு முரசு கொட்டி விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கடந்த 8ம் தேதி முதல் பாசன விவசாயிகளும், கிராம மக்களும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.நேற்று 22ம் நாள் தொடர் போராட்டத்தில் முரசு கொட்டி ஒலி எழுப்பி அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Upparu ,dam ,
× RELATED கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி...