×

புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

கூடலூர், டிச.30: கூடலூர் மைசூர் சாலையில் அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் பேருந்துகள் தற்போது அதிகமாக உள்ளதாலும், கூடலூர் மைசூர்  பிரதான சாலையில் அடிக்கடி வாகனங்கள் சென்று வருவதாலும் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இப் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, பேருந்து நிலையத்தை புதிதாக மாற்றி அமைக்க 4.75 கோடி ரூபாய் அரசு ஒதுக்கி உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கூடலூர் நகர செயலாளர் அனுப்கான் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மாநில வர்த்தக அணி செயலாளர் சஜீவன், முன்னாள் அமைச்சர் மில்லர் மற்றும் நகர ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : ceremony ,bus station ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா