×

ஈரோட்'


ஈரோடு, டிச. 30:  ஈரோடு  மாவட்டத்தில் நேற்று 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பானது  13,606 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சையில்  அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் நேற்று 36 பேர் குணமடைந்து வீடு  திரும்பியதையடுத்து இதுவரை மொத்தம் 13,190 பேர் குணமடைந்துள்ளனர்.  

மருத்துவமனைகளில் 272 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே ஈரோடு  ராஜீவ் நகரை சேர்ந்த 53 வயது ஆண் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து  மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 144ஆக உயர்ந்துள்ளது.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை