×

கணவரை தாக்கிய கந்து வட்டி கும்பல்

ஈரோடு,  டிச. 30:  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அத்தாணி  கருவல்பாடிப்புதுரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி கமலா (26). இவர் நேற்று காலை  ஈரோடு எஸ்பி. அலுவலகத்தில் அளித்த மனுவில் அவர்  கூறியிருப்பதாவது: எனது கணவர் ஆறுமுகம் மினி டோர் ஆட்டோ ஓட்டி  வருகிறார். எங்களுக்கு இரு குழந்தைகள் உள்ளது. எனது கணவர் குடும்ப கஷ்டம்  காரணமாக அத்தாணியை சேர்ந்த பைனான்ஸ் நடத்துபவரிடம் ரூ.20 ஆயிரம்  கடன் வாங்கினார். கொரோனா ஊரடங்கு காரணமாக 6 மாதமாக கடனை செலுத்த முடியாமல்  போனது. பின்னர், ஜூலை மாதம் அவரிடம் பெற்ற கடன் தொகையை முழுமையாக கொடுத்து  விட்டோம்.

ஆனால், அவர்கள் அசல் பணத்தைவிட, வட்டி பணம் அதிகம் கேட்டு  வந்தனர். இந்நிலையில், கடந்த 26ம் தேதி என் கணவர் அத்தாணி பிரிவு ரோட்டில் சரக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது,  அங்கு வந்த கந்து வட்டி வசூல் செய்பவர் மற்றும் அவருடன் வந்த  2 பேர் எனது கணவர் ஆறுமுகத்திடம் கந்து வட்டி பணம் கேட்டு, அடித்து  உதைத்து, ஜாதி பெயரை சொல்லி தகாத வார்த்தையால் திட்டினர்.

மேலும், என்  கணவரின் சரக்கு வாகனத்தை எடுத்து சென்று விட்டனர். தாக்குதலில் காயமடைந்த என் கணவர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.  இது குறித்து ஆப்பக்கூடல் போலீசில் கடந்த 27ம் தேதி புகார்  அளித்தேன். ஆனால், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே,  கந்து வட்டி வசூல் செய்பவர் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது உயிருக்கு பாதுகாப்பு  அளிக்க வேண்டும். மேலும், எனது கணவரின் சரக்கு வாகனத்தையும் மீட்டு தர  வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

Tags : gang ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே காங்....