×

மொல்லன் ஏரிக்கு தண்ணீர்

அரூர், டிச.30: அரூர் வட்டம், வள்ளிமதுரையில் அமைந்துள்ள வரட்டாறு அணை, கடந்த சில மாதங்களாக பெய்த பருவ மழையால் அணை நிரம்பியுள்ளது. அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை பயன்படுத்தி கீரைப்பட்டி ஊராட்சியில் 2 ஏரிகள், எல்லப்புடையாம்பட்டி ஊராட்சியில் மணவாளன் சாமி ஏரி உள்பட 4 ஏரிகள் நிரம்பியுள்ளன.

இதில், எல்லப்புடையாம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட மொல்லன் ஏரிக்கு வள்ளிமதுரை வரட்டாறு அணையில் இருந்து நீர் வரத்துக்கான கால்வாய் வசதிகள் உள்ளன. இந்த ஏரி நிரம்பினால் கௌாப்பாறை மற்றும் எல்லப்புடையாம்பட்டி பகுதியில் வேளாண்மை பணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் கோடையில் குடிநீர் பிரச்னைகள் ஏற்படாது. எனவே, வள்ளிமதுரை வரட்டாறு அணையின் உபரிநீரை பயன்படுத்தி மொல்லன் ஏரியை நிரப்ப பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

Tags : Lake Mollen ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா