×

வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்\

புதுடெல்லி: கொரோனா கட்டுப்பாடு, தென் மேற்கு பருவமழை போன்றவற்றால் இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்தது. விலையை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், பெங்களூர் ரோஸ், கிருஷ்ணாபுரம் வெங்காய ஏற்றுமதிக்கு கட்டுபாடு விதித்தது.

இந்நிலையில், தற்போது நிலைமை சீராகி உள்ளதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து வகையான வெங்காயத்திற்கும் விதிக்கப்பட்ட ஏற்றுமதி தடை மற்றும் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...