×

சிறுணை கிராமத்தில் ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு: கிராம மக்கள் புகார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சிறுணை கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த சிறுணை கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததால், பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு )  சிவ.தினகரனிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் அடுத்த சிறுணையில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்களது பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாயில், கழிவுகள் அடைத்து கொண்டு கடந்த 1 மாதகாலமாக தண்ணீர் தேங்கியுள்ளது.

மேலும், குடிநீர் குழாயில் கடந்த 1 மாதமாக தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சிறுணை ஊராட்சியில் பழுதடைந்துள்ள மின்மோட்டாரை சரி செய்து, குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : village ,
× RELATED கல் குவாரி திட்ட கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு