×

தேசிய நுகர்வோர் கருத்தரங்கு

சேலம், டிச.29: விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் மூலம், தேசிய நுகர்வோர் தினம் அனுசரிக்கப்பட்டு, இணையவழி கருத்தரங்கு நடத்தப்பட்டது. கருத்தரங்கிற்கு துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சென்னை இந்திய தரநிலை பணியகத்தின் விஞ்ஞானி மற்றும் தலைவர் பவானி கலந்து கொண்டு, இந்திய தரநிலை பணியகத்தின் செயல்பாடுகள், பொருட்களின் தரப்படுத்துதல், தரச்சான்றிதழ் வழங்குதல் மற்றும் நம்பகமான, தரமான பொருட்களை வழங்குதல் குறித்து எடுத்துரைத்தார். கருத்தரங்கில் துறையை சேர்ந்த மாணவ, மாணவிகள் மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். அனைவருக்கும் இணைய வழியில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் தனசேகர் மற்றும் வர்ஷினி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : National Consumer Seminar ,
× RELATED டூவீலர் திருடியவர் கைது