×

3 வீடுகளில் திருடிய 4 பேர் கைது

சேலம், டிச. 29: சேலம் கருங்கல்பட்டி தொட்டண்ண செட்டிக்காடு என்ற பகுதியில் கடந்த 13ம்தேதி இரவு நாய்கள் நீண்ட நேரம் குரைத்துக்கொண்டிருந்தது. சந்தேகம் அடைந்த பொதுமக்கள் மறுநாள், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தனர். அதில், 4க்கும் மேற்பட்ட நபர்கள் கையில் தடியுடன் வீதி வீதியாக சுற்றி வரும் காட்சி பதிவாகியிருந்தது. ஒவ்வொரு வீட்டின் கதவுகளை எட்டிப்பார்த்துக்கொண்டே சென்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள 3 வீடுகளின் பூட்டுகளை உடைத்து நகை மற்றும் பூஜை பொருட்களை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பஞ்சந்தாங்கி ஏரி பகுதியை சேர்ந்த குணா(20), ராமு(20), தர்மபுரியை சேர்ந்த பழனிசாமி(30) முத்துப்பாண்டி(20) ஆகியோரை கைது செய்தனர். துக்க நிகழ்ச்சிக்கு வந்த இவர்கள், போதையில் வீடுகளில் திருடியதாக தெரிவித்தனர். இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : houses ,
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...