×

சாத்தூரில் தள்ளு முள்ளு மாலையில் படியுங்கள் ‘பம்பரை’ அகற்ற எச்சரிக்கை

விருதுநகர், டிச.29: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு வாகங்களில் கூடுதலாக இருந்த பம்பர்களை அகற்றும் பணிகளை கலெக்டர் கண்ணன் ஆய்வு செய்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 4 சக்கர வாகனங்களில் கூடுதலாக உள்ள பம்பர்களை அகற்ற வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் கூடுதலாக உள்ள பம்பர்களை அகற்றாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் அபராதம் விதித்து அகற்றப்படும் என தெரிவித்தார். ஆய்வின் போது டிஆர்ஓ மங்களராமசுப்பிரமணியன், ஆர்டிஓ இளங்கோ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ