×

மம்சாபுரத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல் போராட்டம்

திருவில்லிபுத்தூர், டிச. 29: திருவில்லிபுத்தூர் அருகே உள்ளமம்சாபுரம் பேருராட்சியில் சாலியர்தெருவில் குடிநீர் மின்மோட்டார் பழுது காரணமாக கடந்த பல நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனைக் கண்டித்து காலிக்குடங்களை சாலையில் வைத்து  அப்பகுதியினர் மறியல் போராட்டம் செய்தனர். அவர்களுடன் போலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக அறிவித்ததை முன்னிட்டு போராட்டம் கைவிடப்பட்டது. குடிநீர் கேட்டு நடைபெற்ற இந்த போராட்டத்தால் மம்சாபுரம் சாலியர் தெரு பகுதியில் நேற்று பரபரப்பாக இருந்தது. படைப்புழுவால் 1,500 ஏக்கர் மக்காச்சோளப்பயிர் சேதம் விருதுநகர், டிச. 29: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் 8 கிராம விவசாயிகள் வட்டார காங், தலைவர் வைரவசாமி தலைமையில் அளித்த மனு:  மூளிப்பட்டி, ஆமத்தூர் தாய் கிராமங்களும் அதன் உட்கடை கிராமங்களான எம்.ராமசாமிபுரம், எம்.சங்கரலிங்கபுரம், தவசிலிங்கபுரம், மன்னார்நாயக்கன்பட்டி, அ.ராமலிங்காபுரம், மருநத்தம் கிராமங்களில் மானாவாரி பயிராக செப். மாதம் 1,500 ஏக்கரில் பயிரிடப்பட்டது.  அறுவடைக்கு முன்பாக மக்காச்சோளப் பயிரில் அமெரிக்கன் படைப்புழுவால் தாக்கி முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. ஒவ்வொரு விவசாயிக்கும் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் பெற்றுத்தர வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Tags : Stir-fight ,cowboys ,
× RELATED திருச்சி மாவட்டத்தின் முதல்...