×

ராஜபாளையத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கனிமொழி எம்பி கலந்துரையாடல்

ராஜபாளையம், டிச. 29: ராஜபாளையத்தில் `விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திமுக மகளிரணி மாநிலச் செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டார். மருத்துவ செவிலியர்கள், மதுரை சாலையில் உள்ள நூற்பாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். ராஜபாளையம் முன்னாள் நகர செயலாளர் மறைந்த உதயசூரியன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்பு சந்தை மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் கலந்துரையாடினார். ஜவஹர் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.அதனைத் தொடர்ந்து தென்காசி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் திமுக உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார் அதனைத் தொடர்ந்து ஆனந்தா கார்டன் பகுதியில் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுடன் கலந்துரையாடினார். ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் உள்ள அண்ணா கலையரங்கத்தில்  திமுக கிராமசபை கூட்டம், செட்டியார்பட்டி உள்ள அரிசி வியாபாரிகள் மண்டபத்தில் தையல்  தையல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சிகளில் விருதுநகர் தெற்கு மாவட்ட  செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ, தென்காசி எம்பி தனுஷ் எம்.குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், ஊராட்சி ஒன்றிய தலைவர் சிங்கராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Rajapalayam ,
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி