×

காதல் திருமணம் செய்து 3 குழந்தைகளுக்கு தாயாக்கி கைவிட்ட கணவர் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் கதறல்

தேனி, டிச. 29: பெரியகுளம் அருகே உள்ள முருகமலை நகரைச் சேர்ந்த அமாவாசை சோலையம்மாள் (35), தனது 3 குழந்தைகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அப்போது அவர் கூறியதாவது:
பெரியகுளத்தில் உள்ள பட்டாபுளி தெருவைச் சேர்ந்த முத்துராசா, என்னை காதலித்து 2009ல் திருமணம் செய்தார். எங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. 2015ல் முத்துராசா, அவரது குடும்பத்தினர் வற்புறுத்தலால் வேறு பெண்ணை திருமணம் செய்தார். இது குறித்து தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தேன். பின்னர் ஊர் பஞ்சாயத்தில் எனக்கு ரூ.4 லட்சம் ரொக்கம், இரண்டு வீட்டுமனைப்பட்டா தருவதாக ஒப்புக்கொண்டு, வழங்கினார். பின்னர் என்னிடம் வந்து இரண்டாவது திருமணம் செய்த பெண் பிடிக்கவில்லை என கூறி, என்னுடன் கொஞ்சநாள் சேர்ந்து வாழ்ந்தார். அப்போது என்னிடம் இருந்த இரண்டு லட்ச ரூபாய், வீட்டுமனை பத்திரங்களை திரும்ப எடுத்துச் சென்றுவிட்டார். என்னை ஏமாற்றிய முத்துராசாவிடம் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், வீட்டுமனைப் பத்திரங்களை திரும்ப பெற்றுத்தர வேண்டும்’ என்றார்.
பாதுகாப்புக்கு இரு ந்த போலீசார், தேனி அனை த்து மகளிர் காவல் நிலையத்திற்கு சோலையம்மா ளை அனுப்பி வைத்தனர்.

Tags : teenager ,children ,collector ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...