×

போடியில் பரபரப்பு வயிற்றுவலி சிகிச்சைக்கு சேர்ந்த இளம்பெண் திடீர் சாவு தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

போடி, டிச. 29: போடியில் வயிற்று வலி சிகிச்சைக்கு சேர்ந்த இளம்பெண் திடீர் என இறந்ததால், உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவ ட்டம், போடி அருகே உள்ள பத்ரகாளிபுரத்தைச் சேர்ந்தவர் குமார், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி (32). இவருக்கு நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி ஏற்படவே, போடி பஸ்நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு மருந்து மற்றும் ஊசி போட்டு பெட்டில் சேர்த்தனர். ஆனால், வயிற்றுவலி நிற்காமல் காலை வரை தொடர்ந்தது.  நேற்று காலை செல்வராணிக்கு சிறுநீருடன் ரத்தம் வெளியேறி மயங்கி விழுந்துள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவமனை டாக்டர்கள் இறந்ததாக தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து பத்ரகாளிபுரத்தில் இருந்து வந்த உறவினர்கள், மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.  அப்போது வயிற்று வலி வந்த பெண்ணுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால், சிறுநீருடன் ரத்தம் வெளியேறி இறந்துவிட்டார் என குற்றம்சாட்டினர். போடி டிஎஸ்பி பார்த்திபன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானம் செய்தார். இதையடுத்து உறவினர்கள் உடலைப் பெற்றுக்கொண்டு திரும்பினர். இதனால், போடியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Relatives ,hospital ,teenager ,death ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...