உடுமலை,டிச.29: மடத்துக்குளம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சரக்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையின் வளாகத்தில் கோவை மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இந்த வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயன்றுள்ளனர். சத்தம் கேட்டு காவலர்கள் வந்ததும், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் வங்கியில் எந்த பொருளும் திருட்டு போகவில்லை.