×

உப்பாறு அணைக்கு தண்ணீர் கேட்டு 21வது நாளாக கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

தாராபுரம்.டிச.29: தாராபுரம் அருகில் உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி திருப்பூர் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் அர்ஜூனன் தலைமையில் கடந்த 8ம் தேதி முதல் உப்பாறு பகுதி விவசாயிகளும், கிராம மக்களும் இணைந்து அணையின் அருகிலேயே பந்தல் அமைத்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.21வது நாளான நேற்று தங்களது கோரிக்கை அரசின் செவிகளுக்கு எட்டும் வகையில் நூதன முறையில் அனைவரும் “விசில் ஊதி”அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தை நடத்தினர்.

Tags : dam ,Upparu ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்