×

முதல்வர் வருகையையொட்டி திருச்செங்கோடு நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை

திருச்செங்கோடு, டிச.29: திருச்செங்கோடு, குமாரபாளையம் மற்றும் நாமக்கல் ஆகிய பகுதிகளில் இன்று(29ம் தேதி) காலை முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் பொதுமக்களை சந்தித்து பேசுகிறார். மேலும், தொழிலதிபர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். முதல்வர் வருகையையொட்டி, திருச்செங்கோட்டில் பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கனரக வாகனங்கள், லாரி மற்றும் சரக்கு வாகனங்கள் நகருக்குள்  வரக்கூடாது என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக லாரி உரிமையாளர்கள் சங்கம், ரிக்  உரிமையாளர்கள் சங்கம் போன்ற சங்கங்களிடம்  போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags : Tiruchengode ,visit ,CM ,
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு