×

மக்கள் கிராம சபை கூட்டத்தில் அதிமுக அரசை எதிர்த்து கையெழுத்து இயக்கம்

தேன்கனிக்கோட்டை, டிச.29:  கெலமங்கலம் ஒன்றியத்தில் பைரமங்கலம் ஊராட்சி, குந்துமாரனப்பள்ளி, போடிசிப்பள்ளி, ஜெ.காருப்பள்ளி, எச்.செட்டிப்பள்ளி ஊராட்சிகளில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ தலைமையில் நடந்த கூட்டத்தில், கிராமங்களில் குடிநீர், சாலைவசதி, பஸ்வசதி, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என கோஷமிட்டும், வோளண் சட்டத்தை திரும்ப பெற கோரியும் தீர்மானம் நிறைவேற்றி, கிராம மக்கள் கையெழுத்திட்டனர். கூட்டத்தில் கணேசன், கருணாநிதி, முனிராஜ், ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணன், வேணு, தேவராஜ், மல்லிகார்ஜூனா, வினோத் உள்ளிட்ட நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். சூளகிரி: வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில், சூளகிரி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் நாகேஷ் தலைமையில், தோரிப்பாளியில் மக்கள் சபை கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில், வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன், மாவட்ட பொருளாளர் ஜெயராமன், சின்னப்பகவுடு, சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி, முனிராஜ், குருமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : government ,meeting ,AIADMK ,People's Village Council ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...