×

வடிகால் வசதி கோரி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, டிச. 29: தூத்துக்குடி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வடிகால் வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரக்குழு உறுப்பினர் ஆறுமுகம்  தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அர்ஜுனன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, ஒன்றிய செயலாளர் சங்கரன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.  துறைமுக செயலாளர் காசி, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜாய்சன்,   மாதர் சங்கம் கமலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 ஆர்ப்பாட்டத்தின் போது தூத்துக்குடி மாநகராட்சியில் ஆன்டுதோறும் மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக தூத்துக்குடி பிஅண்ட் டி காலனி, ராஜீவ்நகர், அன்னை தெரசாநகர், பால்பாண்டி நகர், கதிர்வேல் நகர், பாக்கியலெட்சுமிநகர்.கோக்கூர், பாரதிநகர், நிகிலேசன்நகர், லெவிஞ்சிபுரம், முத்தம்மாள்காலனி, சின்னகன்னுபுரம், செல்வவிநாயகபுரம்.அன்னாநகர், அம்பேத்கார்நகர் உட்பட பல பகுதிகள் உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வடிகால்  வசதி செய்து கொடுக்க வேண்டும். தரமான தார் சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Tags : Demonstration ,drainage facility ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்