×

நா.முத்தையாபுரத்தில் பஸ் வசதி கோரி ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூர், டிச.29: திருச்செந்தூர் அருகே உள்ள நா.முத்தையாபுரம் கிராமத்திற்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக போதுமான பேருந்து வசதி இல்லாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள் எனவே நா.முத்தையாபுரத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு ஒரு அரசு பேருந்து இயக்கிட புதிய வழி தடத்தை உருவாக்கி தரக்கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நா.முத்தையாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முரசுதமிழப்பன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட துணைச் செயலாளர் டிலைட்டா, சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி, மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ரதியம்மாள், முத்தையாபுரம் கிளை பொறுப்பாளர்கள் நடராஜன், ஞானகுமார், மலர்முருகன், பிரபாகரன், மாடசாமி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உடன்குடி ஒன்றிய பொருளாளர் ஜான்வளவன், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,bus facility ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்