×

எலக்ட்ரீசியன் சேற்றில் முகம் புதைந்து பலி: தாய்க்கு திதி கொடுக்க வந்தபோது விபத்து

செய்யாறு, டிச.29: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா பெரணமல்லூர் சந்தை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பார்த்தீபன்(31), சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில்  எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்தார். இவரது தாய் இறந்து ஓராண்டு ஆனதால் திதி ெகாடுப்பதற்காக, கடந்த 26ம் தேதி தனது பைக்கில் சென்னையில் இருந்து பெரணமல்லூருக்கு வந்தார்.

செய்யாறு அருகே பாராசூர்-நாவல் கூட்ரோட்டில் வந்தபோது, திடீரென நிலை தடுமாறி பைக்குடன் வயல்வெளியில் உள்ள சேற்றில் விழுந்தார். இதில் சேற்றுக்குள் முகம் புதைந்து மூச்சுத்திணறி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தீபன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Electrician ,Accident ,Didi ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...