தென்காசி, டிச.29: தென்காசி மாவட்டத்தில் திமுக சார்பில் நடந்த கிராமசபை கூட்டங்களில் வர்த்தக அணி மாநில துணைத்தலைவர் அய்யாத்துரை பாண்டியன் பங்கேற்றுப் பேசினார். வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியம் கூடலூர், தென்காசி ஒன்றியம் தேன்பொத்தை, செங்கோட்டைஒன்றியம் கற்குடி, வேம்பநல்லூர் பகுதிகளில் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது. வர்த்தக அணி மாநில துணைத்தலைவர் அய்யாத்துரை பாண்டியன் தலைமை வகித்தார். வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியச் செயலாளர்கள் பொன் முத்தையா பாண்டியன், ராமையா என்ற துரை, ரவிசங்கர், கிளைச் செயலாளர்கள் குருசாமி பாண்டியன், ரமேஷ், முருகேசன்,
கனியப்பா முன்னிலை வகித்தனர்.
இதில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் லிங்கராஜ், காசிதர்மம் துரை, மாவட்ட துணைச்செயலாளர் மாடசாமி, வக்கீல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பொன்ராஜ், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சரவணகுமார், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் மனோகரன், இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் முத்துசாமி, மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மெடிக்கல் சுந்தர், மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தமிழ்ச்செல்வி,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப அணி வெள்ள பாண்டி, ஒன்றிய துணைச்செயலாளர் மாரித்துரை, வர்த்தகர் அணி ஒன்றிய துணை அமைப்பாளர் ராஜகுரு, மாணவர் அணி ஒன்றிய அமைப்பாளர் முத்துகுமார், வேலாயுதபுரம் கிளைச் செயலாளர் லூர்துசாமி, சுப்பிரமணியன், ராமராஜ், வாசு துரைபாண்டியன், முருகேசன், மாடசாமி, வேல்சாமி, முத்துகுமார், கலைவாணன், சாமித்துரை உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.