×

கருத்தரங்கில் வலியுறுத்தல் பூஜ்யம் கல்வியாண்டிற்கு வாய்ப்பில்லை

மன்னார்குடி, டிச.29: தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பள்ளிகள் செயல்படாத நிலையில் இந்த ஆண்டை பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிப்பது தொடர்பாக முதலமைச்சருடன் பேசி முடிவு செய்யப்படும் என்றும், முதல்வர் சூழ்நிலைக்கேற்ப என்ன முடிவு செய்கிறாரோ அந்த முடிவைத்தான் பள்ளிக் கல்வித்துறை அமல்படுத்தும். முதல்வரிடத்தில் கருத்துக்கள் பரிமாறியதற்கு பிறகுதான், முடிவுகள் வெளிப் படையாக அறிவிக்க இயலும் என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் கூறுகையில், கொரோனா பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு மூலம் மூடப்பட்டது. ஆனால் பல்வேறு தளர்வுகளின் அடிப்படையில் பள்ளிகளில் ஜூன் மாதம் முதல் பள்ளிகளில் மாணவர்கள் தவிர ஆசிரியர்கள் பணியாளர்கள் தினந்தோறும் வருகைத்தந்து அன்றாட பணிகளை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் கல்வி தொடர்பில்லாமல் போய்விடக்கூடாது என்ற அடிப் படையில் அரசு கல்வித் தொலைக்காட்சி உள்ளிட்ட தனியார் தொலைக் காட்சிகளில் பாடங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனை ஆசிரியர்கள் கல்வித் தொலைக்காட்சி படபிடிப்புத் தளத்திற்கு சென்று பாடங்களை நடத்தி காட்சி படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் யூடியூப் மற்றும் காணொளி காட்சி மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மாணவர்களுக்கு பாடம் தொடர்பான சந்தேகங்களை தீர்ப்பதோடு இதுபோன்ற நெருக்கடியான சூழலில் தன்னம்பிக்கையோடு வாழ் வதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறி வருகிறார்கள். நேரிடை பயிற்சிதான் 100 சதவீதம் இருக்கும். ஆனாலும் ஓரளவிற்கு சூழ் நிலைக்கேற்ப ஆசிரியர்கள் மாணவர்களோடு தொடர்பு கொண்டு வருகிறோம். மேலும் தேசியத் திறனாய்வுத் தேர்விற்கு மாணவர்களை தயார் செய்து தேர்வு எழுதியுள்ளார்கள்.

அவ்வப்போது சிறுசிறு தேர்வுகள் மூலமும் மாணவர் களை தயார் செய்து வருகிறோம். இந்நிலையில், அமைச்சரின் கூற்றுப்படி இவ்வாண்டு எப்படி பூஜ்யம் கல்வி யாண்டாக எடுத்துக் கொள்ள முடியும். கல்வியாண்டு என்பது ஜூன் முதல் ஏப்ரல் வரை உள்ளது. அப்படி பார்த்தால் கூட இன்னும் 4 மாதங்கள் உள்ளது. பூஜ்யம் கல்வியாண்டு மாணவர்களுக்கு ஓராண்டு வீணாகப் போகும். மீண்டும் ஒரே வகுப்பில் படிப்பது என்பது தோல்வி பெற்றதற்கு சமம். மாணவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் உயர்படிப்பு வேலைவாய்ப்பு அனைத்திலும் ஓராண்டு பின்னடைவு ஏற்படும். எனவே இந்த கல்வியாண்டு பூஜ்யம் கல்வியாண்டிற்கு வாய்ப்பு உருவாகும் சூழல் இல்லை என தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பிகே இளமாறன் கூறினார்.

Tags : seminar ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்