×

மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் நிர்வாகி பேட்டி சுக்காலியூர் சாலைப்புதூரில் சிதிலமடைந்த மின்கம்பம் மாற்றியமைக்க கோரிக்கை

கரூர், டிச. 29: கரூர் சுக்காலியூர் சாலைப்புதூர் பகுதியோரம் சிதிலமடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை விரைந்து மாற்ற வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் செல்லாண்டிபாளையம் சாலையில் சுக்காலியூர் அருகே சாலைப்புதூர் உள்ளது. இந்த பகுதியின் குடியிருப்பை ஓட்டி பல ஆண்டுகளாக மின்கம்பம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.பல்வேறு பகுதிகளுக்கு மின்சப்ளை வழங்கப்பட்டு வரும் இந்த மின்கம்பம் சில மாதங்களாக சிதிலமடைந்து, எந்த நேரமும் விழும் நிலையில் உள்ளது. இதனை மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதியினர்களும் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, பகுதி மக்கள் நலன் கருதி மோசமான நிலையில் உள்ள இதனை விரைந்து மாற்ற தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Administrator ,Marxist-Leninist ,
× RELATED சென்னையில் அதிமுக நிர்வாகி வீட்டில்...