×

திமுக நிர்வாகியின் சகோதரரை கொல்ல முயற்சி: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

ஊத்துக்கோட்டை: செங்குன்றம் அருகே சோழவரம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். சோழவரம் பகுதி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர். இவரது அண்ணன் கண்ணன்(46). ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவர், நேற்று பெரியபாளையம் அருகே திருநிலை பகுதியில் உள்ள பண்ணை தோட்டத்திற்கு சென்றுவிட்டு மாலைகாரில் வீடு திரும்பினார். டிரைவர் செந்தில் என்பவர் காரை ஓட்டிச்சென்றார். இந்நிலையில், கன்னிகைப்பேர் ஏரிக்கரை பகுதியில் கார் சென்றபோது அங்கு வேகத்தடை இருந்ததால் கார் நிதானமாக சென்றது.

இதையறிந்த 2 பைக்கில் வந்த 4 மர்ம நபர்கள் காரின் முன்பு பைக்குகளை நிறுத்தி கீழே இறங்கி டிரைவர் பக்கம் உள்ள கார் கண்ணாடியை கத்தியால் உடைத்தனர். பின்னர், கண்ணனை கத்தியால் வெட்டுவதற்கு சென்றனர். இதையறிந்த, கண்ணன் தப்பி ஓடி ஊருக்குள் தப்பியோடினார். அப்பகுதி மக்கள் கண்ணனுக்கு ஆதரவாக ஓடி வந்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து கண்ணன் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து முன்விரோதமா அல்லது தொழில் போட்டியா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : brother ,executive ,DMK ,individuals ,
× RELATED மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக...