×

ஆலந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சார்பு நீதிமன்றம் திறப்பு

ஆலந்தூர்: ஆலந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிவில் வழக்குகளை விசாரிக்கும் சார்பு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிவில் வழக்கு தொடர்பான விசாரணைகள் அனைத்தும் தாம்பரம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கு நீண்ட தூரம் அலைய வேண்டும் என்பதால் ஆலந்தூரில் தனியாக சிவில் சார்பு நீதிமன்றம் அமைக்கக் கோரி ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து, ஆலந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிவில் வழக்குகளை விசாரிக்கும் சார்பு நீதிமன்றம் புதிதாக அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் மாலை கானொலி காட்சி மூலம் நடந்தது.

சென்னை ஐகோர்ட் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா இதனை திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட் நீதிபதி பவானி சுப்புராயன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், மாவட்ட நீதிபதி, மாவட்ட கலெக்டர் உட்பட போலீஸ் உயரதிகாரிகள் பலர் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். இதேபோல், ஆலந்தூர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழாவில், தாம்பரம் சார்பு நீதிமன்ற நீதிபதி சுல்தான் ஆர்பீன், மாஜிஸ்திரேட்டுகள் கார்ல்மார்க்ஸ், மலர்கொடி, ஸ்டெர்லி, சிட்டிபாபு, சுஜாதா, ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள் என பலரும் கலந்து கொண்டனர். சார்பு நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக கோதண்டராஜ் பொறுப்பேற்று முதல் வழக்கு விசாரணையை தொடங்கினார்.

Tags : Opening ,Pro Court ,Alandur Integrated Court ,
× RELATED சொத்து பிரச்சனை!: திருப்பூர் மாவட்டம்...