திருச்செந்தூர், டிச. 28: திருச்செந்தூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பணிமனை முன்பு தொடர் முழக்கம் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு கிளைத் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார், இதில் எல்பிஎப் மாவட்ட கவுன்சில் குழந்தைவேலு, எல்பிஎப் கிளைச் செயலாளர் ஜெயகுமார், ஜேடிஎல்எப்என் பிரம்மநாயகம், ஆர்ஈடபுள்யூஏ மாநிலக்குழு உறுப்பினர் சிவதாணுதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.