×

கோயில் நிலத்தில் கசாப்பு கடை அகற்றம்

குமாரபாளையம், டிச.28: குமாரபாளையம் காவேரி நகர் புதிய பாலம் அருகே, லட்சுமி நாராயண சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஆக்கிரமித்து மாட்டிறைச்சி கடை திறக்கப்பட்டது. கோயில் நிலத்தில் மாட்டிறைச்சி கடை நடத்துவதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் வக்கீல் தங்கவேல் எதிர்ப்பு தெரிவித்து, காவல்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு புகார் தெரிவித்தார். இதையடுத்து குமாரபாளையம் போலீசார், அனுமதியின்றி கடை வைத்தவரை நேரில் அழைத்து எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து, நேற்று கசாப்பு கடை செயல்படவில்லை. கடையின் கூரையும் கழற்றப்பட்டிருந்தது. கடை அகற்றப்பட்டதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டதாக வக்கீல் தங்கவேல் தெரிவித்தார்.

Tags : Removal ,butcher shop ,temple land ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...