மதுரை, டிச. 28: மதுரை ரயில்நிலைய முன்பதிவு மையத்தில், விதிமீறி கூடுதல் நேரம் முன்பதிவு செய்த விவகாரத்தில், மைய கண்காணிப்பாளர் உள்ளிட்ட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் சுதந்திர தினம், புத்தாண்டு, ரம்ஜான், கிறிஸ்துமஸ், தீபாவளி உள்ளிட்ட விடுமுறை தினங்களில் பகல் 2 மணி வரை மட்டும் முன்பதிவு செய்யப்படும். இதன்படி மதுரை ரயில் நிலையத்தில் கடந்த 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று பிற்பகல் 2 மணி வரை மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு, அது தொடர்பாக அறிவிப்பும் வைக்கப்பட்டிருந்தது.