×

தண்டராம்பட்டு அருகே 326 பயனாளிகளுக்கு இலவச ஆடு

தண்டராம்பட்டு, டிச.28: தண்டராம்பட்டு அருகே 326 பயனாளிகளுக்கு அரசு சார்பில் இலவச ஆடுகள் வழங்கப்பட்டது. தண்டராம்பட்டு அடுத்த புதூர்செக்கடி, பெருங்குளத்தூர், நெடுங்கவாடி ஊராட்சிகளில் அரசு சார்பில் இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. இதைத்ெதாடர்ந்து, தகுதியான 326 பயனாளிகளுக்கு இலவச ஆடு வழங்கும் நிகழ்ச்சி தண்டராம்பட்டு வாரச்சந்தையில் நேற்று நடந்தது. கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஜெயக்குமார் பயனாளிகளுக்கு இலவச ஆடுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர்கள் மகாலட்சுமி பாண்டு, விஜயா ராமசாமி, சண்முகம், கால்நடை மருத்துவர்கள் முத்துசாமி, முரளி, தமிழன், லக்ஷ்மி பிரியா, ஒன்றிய கவுன்சிலர் செல்வி குப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thandarambattu ,
× RELATED ஏரியில் மீன் குஞ்சுகளை விட அனுமதிக்க...