×

தங்கையுடன் விளையாடி கொண்டிருந்தபோது மாடியில் இருந்து விழுந்த சிறுமி பலி

வந்தவாசி, டிச.28: வந்தவாசி டவுன் சன்னதி தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(45), அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி தீபா. இவர்களது மகள்கள் புவனேஸ்வரி(15), மதி(11). இதில் புவனேஸ்வரிக்கு மூளை வளர்ச்சி குறைபாடு இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் வீட்டின் மாடியில் புவனேஸ்வரி தனது தங்கை மதியுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக புவனேஸ்வரி மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கான வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : floor ,sister ,
× RELATED பணியின் போது தவறி விழுந்த மேஸ்திரி பலி